ஜெயஸ்ரீ ஷங்கர்

Monday, May 30, 2016

மாம்பழமாம்....மாம்பழம்...!




மாம்பழம்னு நினைச்சாலே அதன் மணம் , சுவை, மனத்தை கொள்ளை கொள்ளும். சின்ன வயசில் பாடிய பாப்பா பாட்டும் கூடவே நினைவைத் துரத்தும்.

கடிக்க வேண்டாம், அப்படியே குடிப்பேன் என்று சென்ற வருடம் மாம்பழத்தின் சாறுக்கு விளம்பரங்கள் வந்தது போக, இந்த வருடமோ....பாட்டிலையே கடித்து சாப்பிடுவேன்.....அவ்ளோவும் மாம்பழச் சாறு...! என்று ஆசை காட்டி, சக்கரை நோயாளிகளின் மனத்தை பாடாய் படுத்தும் மாம்பழ சீசன் இது.

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.
100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதிகமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது.
உத்திரப்பிரதேசத்தில்- சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா, கிளிமூக்கு என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

ஏதோ கார்பைட் கல்லை வைத்து பழுக்க வைக்கிறார்கள் என்ற புகார் ஊர் முழுக்க உலாவினாலும், மாம்பழ ரசிகர்கள் அவற்றை எல்லாம் காதில் போட்டுக் கொள்வதே கிடையாது. ஒரு சீசனுக்கு ஒரே ஒரு பழம் யார் வேண்டுமானாலும்...note the point .....யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். நறுக்க வேண்டாம்.....அப்படியே அலம்பி ரசித்து கடித்து ருசித்து சாறு வழிய வழிய....சாப்பிட்டுப் பாருங்கள்.....சக்கரை பத்திய பயத்தை கொஞ்சம் தூர வையுங்கள். மனம் விரும்பி செய்யும் சில விஷயங்களுக்கு வியாதியும் எட்டிப் போகும். ஆனால் சின்னதா...ஒண்ணே ஒண்ணு தான். 
Done ..:)
எதுக்கு இவ்ளோ பீடிகை தெரியுமோ....? நானும்.....நானும்....எனக்கும்....எனக்கும்.....அதாங்க..சக்கரைக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்காம்...சரி வந்து ஒட்டிக்கோன்னு விட்டுட்டேன்....இப்போ ஓட்ட முடியலை..!

No comments:

Post a Comment